கணவன்-மனைவி உறவு குறித்து வள்ளுவர் கூறிய புணர்ச்சிமகிழ்தல்
இன்றைய தலைமுறைக்கு பேஸ்புக்கில் வருவதை பார்ப்பதும், வாட்ஸ்அப்பில் வருவதை பகிர்வதும், மனதில் தோன்றுவதை அப்படியே முகம் தெரியாதவர்கள் அதிகம் உள்ள முகநூலில் எழுதுவதும் பேஷனாக உள்ளது. திருமணம் ஆன, ஆகாதவர்கள் , காதல், காமம் குறித்து இணைத்தில் தேடுவது அதிகமாக உள்ளது. இவர்களுக்காக 2000 ஆண்டுகளுக்கு முன்பே, கணவன்-மனைவி இடையே நீடித்த அன்பும், காதலும் , காமமும் எப்படி இருக்க வேண்டும் என்பதை புணர்ச்சிமகிழ்தல் என்கிற 10 குறளில் திருவள்ளுவர் அழகாக விளக்கியுள்ளார். அவற்றை பார்ப்போம்.
அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல்
குறள் : 1101 முதல் 1110 வரை
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள
விளக்கம்: விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு.
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.
விளக்கம்: நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
விளக்கம்: தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?.
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.
விளக்கம்: தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?.
வேட்ட பொழுதின் அவையவை போலுமே